ஜோதிகாவின் அடுத்த படம்..

News
0
(0)

ஜோதிகா நடித்த “நாச்சியார்” படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து, ஜோதிகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக வித்யா பாலன் நடிப்பில் வெளியான “தும்ஹரி சுளு” படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. வித்தியாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாகவும், ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், மொழி படத்திற்கு பின்னர் இயக்குநர் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரேடியோ ஜாக்கி ஆகி சாதிக்க நினைக்கின்ற, திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார்.

“செக்கச்சிவந்த வானம்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதன்பிறகு இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.