கார்த்தியுடன் சேரப்போகும் மூன்றாவது ஹீரோயின்!

News
0
(0)

நடிகர் சூரியாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிப்பது எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

படத்திற்காக “மேயாத மான்” ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் “வனமகன்” சாயிஷா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் மூன்றாவது நாயகி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமுத்திரகனி இயக்கிய “தொண்டன்” படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்த ஆர்த்தனா பினு
இந்தப் படத்தின் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் கதை என்ன? மூவருக்கும் என்ன கதாபாத்திரம்? என இப்போதே கோலிவுட் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.