அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான், குறிக்கோள் அல்ல : கீர்த்தி சுரேஷ்

News
0
(0)

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார்.

தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், தமிழிலும் வெளிவர இருக்கும் சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். நானி, பவன்கல்யாண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முன்னனி நாயகர்களின் திரைப்படங்களில் கைகோர்த்து வருகிறீர்கள். அடுத்து யாருடன் நடிக்க விருப்பம் என்று அவரிடம் கேட்ட போது, “அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாய்ப்பு வரும் போது தானாக வரும். எனவே, வருகிற படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

இந்த ஹீரோக்களுடன் தான் நடிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் அல்ல. நடிக்கும் படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியம்”. என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.