டுவிட்டரில் இருந்து விலகியது குறித்து குஷ்பு விளக்கம்

News
0
(0)

நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட தனது கருத்துகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்து வந்தார். 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார்.

இதுபற்றி குஷ்பு கூறும்போது, ‘நான் டுவிட்டருக்கு அடிமையானது போல் சமீபகாலமாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. காலையில் எழுந்ததுமே கை செல்போனை தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன பிரச்சினை? அதற்கு நாம் என்ன கருத்து சொல்லலாம்? என்ற சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. போதைக்கு அடிமையானது போல ஒரு உணர்வு.

காலையில் பத்திரிகைகளை கூட படிக்க முடியவில்லை. டுவிட்டரிலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருப்பது போல், உணர்வு ஏற்பட்டு வந்தது. டுவிட்டர் இல்லை என்றால் வாழ முடியாதா? என யோசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக டுவிட்டரில் இருந்து நான் விலகிக் கொண்டேன்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.