புதிய வரலாறு படைக்கும் திரிஷா!

News
0
(0)

ஒரு நடிகையைப் பொறுத்தவரை திரையுலகிற்கு அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பதென்பது சாதாரண காரியமில்லை .
அந்த வரலாறை உடைத்து இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வவலம் வருபவர் திரிஷா மட்டும் தான். திரிஷா தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’, அரவிந்த் சாமியுடன் ‘சதுரங்க வேட்டை’, விஜய் சேதுபதியுடன் ‘96’ என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய இரு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விரு படங்களின் வரிசையில் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘குற்றப்பயிற்சி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் திரிஷா, பெண் துப்பறிவு அதிகாரியாக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இப்படம் தான் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் படம் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தை ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார். இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய வெர்னிக் இயக்குகிறார்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.