மதுரைவீரனின் புதிய முயற்சி.. ஏற்குமா திரையுலகம்?

News
0
(0)

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சவால் தமிழ் ராக்கர்ஸ் தான். படம் வெளியான மறுநாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து, ஒரு தயாரிப்பாளாரின் ஒட்டுமொத்த உழைப்பையும் எங்கிருந்தோ நோகாமல் திருடிக் கொள்கிறார்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற கும்பல்.

இந்த இணையத் திருட்டை தடுப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் நிறைய முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், அதற்கு இதுவரையில் எந்த முழுமையான பலனுமே இல்லை. 

இந்தத் தொல்லைக்கு புதிய முடிவை எடுத்திருக்கிறது “மதுரை வீரன்” படக்குழு. எப்படியெனில், படம் வெளியாகும் அன்றே ஆன்லைனிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. அதே நேடரத்தில் ஆன்லைனில் வெளியாகும் “மதுரை வீரன்” படத்தை அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் அனைத்து படங்களும் இது போல அனைத்து படங்களும் வெளியிடப்படலாம், என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே  படத்தை ஆன்லைனில் வெளியிடலாம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

“மதுரை வீரன்” படத்தில் சண்முகபாண்டியன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நாளை வெளியாகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.