
அவனுடைய கொலை வெறியில் இருந்து வெண்பாவை, அபிசரவணன் காப்பாற்றுகிறார். அவர் மீது வெண்பாவுக்கு நல்லெண்ணம் ஏற்படுகிறது. அதுவே இருவருக்கும் இடையே நட்பை வளர்த்து, காதலாக மாற்றுகிறது. காதல் வசப்பட்ட பின், வெண்பாவுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. சாப்பாடு, தூக்கம் இழக்கிறார். அவரை அபிசரவணன் வற்புறுத்தி, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்.

அபிசரவணன், களையான முகம். காதலர் வேடத்துக்கு பொருந்துகிறார். வெண்பாவை ஒருதலையாக காதலிக்கும்போது, அவர் முகமெல்லாம் பிரகாசிக்கிறது. காதலி தன்னை மறந்து விடுவாளோ என்று சந்தேகப்படும் காட்சியில், காதலின் வேதனைகளை முகத்துக்கு கொண்டு வருகிறார்.
வெண்பாவுக்கு கனமான கதாபாத்திரம். அப்பா மீது அபரிமிதமான பாசம், படிப்படியாக காதல்வசப்படுவது, அப்பா பாசத்தையும் தாண்டி காதலரின் பிடியில் சிக்குவது, படிப்பில் இருந்து கவனம் விலகுவது என நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம். வெண்பா மிக இயல்பாக நடித்து, கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்

ராஜா பவதாரிணியின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவும், கூடுதல் அம்சங்கள். இடைவேளை வரை கதை அதிக கவனம் பெறாமல் கடந்து போகின்றன. இடைவேளைக்குப்பின் கதையும், காட்சிகளும் உயிரோவியங்களாக மனதில் ஆழமாக பதிகின்றன. கடைசி காட்சிகள் இரும்பு இதயங்களை கூட இளக வைத்து விடும். டைரக்டர் அசோக் தியாகராஜனுக்கு விருது நிச்சயம்!