பவர் பாண்டியாக மோகன்பாபு?

News
0
(0)

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என தான் கால் பதித்த ஒவ்வொன்றிலும், தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் தனுஷ்.

அதைத் தொடர்ந்து, அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள படம் ‘ப.பாண்டி’. இப்படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்களும் படக்குழுவினரை திருப்திபடுத்தும் விதமாக அமைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை பார்த்த ரஜினியும், தனுஷைக் கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாது தனது நெருங்கிய நண்பரான மோகன்பாபுவை, ரஜினி சென்னைக்கு வரவழைத்து இந்த படத்தை அவருக்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

படத்தை பார்த்து பிரமித்துப்போன மோகன்பாபு, இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் மோகன்பாபுவே நடிக்க முடிவு செய்துள்ளாராம். சுப்பிரமணிய சிவா இப்படத்தை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.