
நடிகர் ரவிமரியா பேசும்போது,

அன்று குஷ்பூ, பிறகு நயன்தாரா ஆகியோர்களை அனைவருக்கும் பிடித்தது போல இன்று ஐஸ்வர்யா மேனனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சுஜித் பேசும்போது,
இந்த வாய்ப்பைக் கொடுத்த சுந்தர்.சி, ராணாவிற்கு நன்றி. தெலுங்கில் ‘டியர் காமரேட்’ வெற்றி படத்தில் பணிபுரிந்த பிறகு, தமிழில் இப்படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் பிரதீப் பேசும்போது,
ஆதியுடன் இது 3வது படம். அடுத்தடுத்த படங்களில் இது தொடரவேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
நடிகர் கதிர் பேசும்போது,
ஆதிக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நேரம் செலவழித்து என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். அதனால் எனது கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்தார்கள் என்றார்.
நடன இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,

ஐஸ்வர்யா நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.
‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி பேசும்போது
இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று அழைத்தார். ராணாவிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.
மொத்த படக்குழுவினரும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினார்கள் என்றார்.
‘எரும சாணி’ புகழ் விஜய் பேசும்போது,

எழுத்தாளர் சத்யகுமார் பேசும்போது,

கலை இயக்குநர் பிரேம் அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,
ரவிக்குமாருக்கு கேமரா வைப்பதற்கு சிறிது பதற்றம் இருக்கும். அவர் ஏதாவது குறைகூறுவாரா என்ற தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அவர் எதுவும் கூறாததே எனது வெற்றியாக கருதுகிறேன். ரவிமரியாவின் நடிப்பைப் பார்க்கும்போதே சிரித்து விடுவேன் என்றார்.
கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது,

மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

நான் சில காட்சிகளில் சில யோசனைகள் ராணாவிற்கு கூறுவேன். சிலவற்றை கேட்டுக் கொள்வார். சிலவற்றுக்கு அது இந்த இடத்திற்கு பொருந்தாது என்று கூறுவார். ராணா இப்படத்துடன் நிற்காமல் விரைந்து அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும்.
ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது.
புதுமுக இயக்குநர்களுடன் 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இருக்கும் இளைஞர்கள் இரவில் தான் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தில் பணியாற்றி மொத்த குழுவினர்களுக்கும் நன்றி என்றார்.

ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது.
கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார்.
எனது நண்பர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
இப்படத்தின் உலக உரிமை பெற்ற விநியோகதஸ்தர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் பேசும்போது,
‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ படத்தில் உதவியது போல ‘நான் சிரித்தால்’ படத்திற்கும் இயக்குநர் சுந்தர்.சி உதவினார். அடுத்த படத்திற்கு 1000 திரையரங்கில் வெளியிடுவேன் என்றார்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது,


மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி.ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு.ஐஸ்வர்யா மேனன் ‘பிரேக் அப்’ பாடலில் காலணி கூட இல்லாமல் சிறப்பாக நடனமாடினார். அதேபோல், நேரம் தவறாமைக்கு ஐஸ்வர்யா மேனன் சிறந்த உதாரணம்.எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி என்றார்.

இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள்.

எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி.என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம் என்றார்.