நரகாசூரனுடன் இணைந்த ஸ்டைலிஷ் வில்லன்!!

News
0
(0)

“துருவங்கள் 16” வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் அதிக எதிர்பார்ப்பிற்கு இடையில் இயக்கி வரும் படம் “நரகாசூரன்”. கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒன்ராகா எண்டெயின்மெண்ட்” மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ”நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்” இணைந்து தயாரிக்கும் இந்த படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

நாயகன் சந்தீப் கிஷன் மற்றும் நாயகி ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

இந்த இறுதிகட்ட படபிடிப்பில் நடிகர் அரவிந்த் சாமி தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். அரவிந்த் சாமி தற்போது சதுரங்க வேட்டை2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் வணங்காமுடி ஆகிய படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் அரவிந்த் சாமியோடு இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியா சரண் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் “நரகாசூரன்” திரைப்படத்தை பிப்ரவரி 2018ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.