மே 5ல் இல்லை, 12ல்…

News
0
(0)

கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை வருகிற மே 5-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பால், இந்த வாரமும் அந்த படமே அதிக திரையரங்குகளை ஆக்கிரமிக்கக்கூடும்.

எனவே, இதை கருத்தில் கொண்டு ‘எய்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, வருகிற மே 12-ந் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரெண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.