சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை : பன்னீர் செல்வம்

General News
0
(0)

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘எங்களின் அடிப்படை கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடைபெறும் வரை ஓய மாட்டோம். அதிமுகவில் சசிகலாவின் குடும்பம் இருக்க கூடாது. இவர்கள் குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை.

சசிகலா குடும்பம் அதிமுக நடைமுறையில் தவறுக்கு மேல் தவறு செய்துள்ளது. ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக இருப்பதை ஏற்க முடியாது.

ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது அதிமுக சட்டவிதிகளுக்கு புறம்பானது.  இரட்டை இலை சின்னம் தொடர்பாக, சாதகமான தீர்ப்பு வழங்க பண கொடுத்து முயற்சித்திருக்கிறார்கள்’ என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.