விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

News
0
(0)

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித்தும் ‘விழித்திரு’ படம் பார்த்துவிட்டு தனது வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

‘பணமும் அதிகாரமும் சேர்ந்துகொண்டு இந்த சமூகத்திலிருந்து அன்பை அழித்துக்கொண்இருக்கிறது. நாமெல்லாம் விழித்திருக்க வேண்டியது அவசியத்தை விழித்திரு மூலம் சொன்ன மீரா கதிரவனுக்கு வாழ்த்துகள். விழித்திரு அனைவரும் பார்க்க வேண்டிய படம்’ என்று ரஞ்சித் அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.