பத்மாவதி படும் பாடு!

News Uncategorized
0
(0)

வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை மையப்படுத்தி கதை இருந்தாலோ அந்த படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் படாதபாடு பட்டுப் போகிறார்கள் இப்போதெல்லாம். ஒரு வசனத்தைக் கூட சுதந்திரமாக படத்தில் வைப்பதற்குப்  பல தடைகள் இருக்கிறது இங்கே.

இதே தொல்லை தான் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள “பத்மாவதி” திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் இப்படி சர்ச்சை உருவாக்கும் அமைப்புகள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தாலும், “பத்மாவதி” திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி அதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த வாரம் அனுப்பி இருக்கிறார்.

ஆனால், சான்றிதழ் விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக கூறி அந்த விண்ணப்பத்தை இயக்குனருக்கு தணிக்கை வாரியம் திருப்பி அனுப்பி உள்ளது. அந்த விண்ணப்பத்தில் என்ன குறை என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்திருக்கின்றனர். இதனால் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதிலும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பு நிர்வாகி அஜித் ஆந்த்ரே கூறுகையில், “எங்கள் விண்ணப்பத்தில் சிறு குறைகள் இருப்பதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் திருப்பி அனுப்பியது உண்மை தான். நாங்கள் அதனை களைந்து மீண்டும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் படத்திற்கு எதிராக கிளம்பி இருக்கும் சர்ச்சைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டபடி படம் வெளியாகும். யாரும் எங்கள் படத்தை தடுத்து நிறுத்த முடியாது” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.