இசைத் தலைவனை தமிழில் வாழ்த்திய குடியரசுத் தலைவர்!!

News
0
(0)

இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குத் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர்.

இசை ரசிகர்களால் ‘ராகதேவன்’ என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. அவருக்கு இன்று 75வது பிறந்த நாள். இதை முன்னிட்டுப் பலரும் அவருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், தன்னுடைய வாழ்த்தைத் தமிழில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற இசைக் கலைஞர், இசை மாமேதை தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில் அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் – குடியரசுத் தலைவர் கோவிந்த்” என குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ராம்நாத் கோவிந்த்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.