விஷால் வீடு முற்றுகை.. போலீஸ் குவிப்பு!!

Uncategorized
0
(0)

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று முதல் (மே 11) தமிழகமெங்கும் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
எனினும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுப் படங்கள் எதுவும் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி “இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி” என்ற அமைப்பினர் நடிகர் விஷால் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

இதனால் “இரும்புத்திரை” திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கும், விஷால் வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.