காலில் விழக் கூடாது.. தோளில் கைபோடக் கூடாது..

News
0
(0)

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அப்போது அவர் சந்தித்தார்.
விடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை பிறகு சந்திப்பதாக அறிவித்து இருந்தார். பின்னர் 2.0, காலா படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் ரசிகர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த படங்களை முடித்து விட்டதால் மீண்டும் ரசிகர்கள் சந்திப்புக்கு தயாராகி உள்ளார். வருகிற 26-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை 6 நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

எந்த தேதியில் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

26-ந் தேதி காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
27-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

28-ந் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
29-ந் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 30-ந் தேதி மற்றும் 31-ந் தேதி ஆகிய இரண்டு நாட்களும்
வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சால்வை, மாலைகள் அணிவிக்க கூடாது என்றும், காலில் விழக்கூடாது
என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தோளில் கைபோடக்கூடாது, கையை பிடித்து குலுக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.