ரஜினியின் கண்களில் அருவி

News
0
(0)

“அருவி” திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகி உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

SPI சினிமாஸ் திரையரங்கில் முதலில் SERENE மற்றும் 6Degrees போன்ற ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட அருவி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையெடுத்து தற்போது சத்யம் ஸ்க்ரீனில் திரையிடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட மாலை நேரத்தில் அனைவரும் குடும்பத்தோடு வந்து “அருவி” திரைப்படத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள்.

இன்று அருவி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து அருவி – “என்னை அழவைத்த படம், சிரிக்க படம், சிந்திக்க வைத்த படம். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ரொம்ப வருஷம் இந்த படம் பேசப்படும்” என்று படத்தை பற்றி பாராட்டி இயக்குநர் அருண் பிரபுவிடம் 20 நிமிடம் பேசியுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.