ரஜினிக்கு அரசியல் நல்லதல்ல! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

News
0
(0)

மீண்டும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது “ரஜினி அரசியல்”. தனது ரசிகர்களை சென்னையில் சந்தித்து வரும் ரஜினி, “போர் என்றால் தேர்தல் தான், வந்தால் வெற்றிபெற வேண்டும்.
என் முடிவு என்ன என்பதை வருகிற டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பேன்” என்று பேசியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ள ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுகவின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறுகையில், “இப்போது அரசியலுக்கு வருவது தேவையில்லாத்தது தான். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டே
இதைக் கூறுகிறேன். அவர் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு அமைதியாக வாழலாம்” என்று கூறினார்.

இவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.