ரஜினி வீட்டின் முன் தள்ளுமுள்ளு!

News
0
(0)

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார். ரஜினி படம் வெளியாகிறது என்றால் தான் அவரது ரசிகர்களுக்கு திருவிழா. தற்போது ரஜினி 2.0 மற்றும் காலா என இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி அரசியலுக்கு வருவதற்குத் தயாராகி வருவதாக கூறப்படும் இந்த சூழலில், அவரது பிறந்தநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே தான் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். பல ஊர்களில் இருந்தும் அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போயஸ் தோட்ட வீட்டின் முன்பு சிறிது பதற்றம் நிலவியது. ரஜினி வீட்டில் இல்லை என அறிவுறித்திய பிறகும் ரசிகர்கள் களைந்து போக மறுத்ததால் அங்கே பதற்றம் நிலவியது.

பின்னர் காவல்துரையினர் அங்கே கூடியிருந்த ரசிகர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.