ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் டபுள் ஆக்‌ஷனில் ரஜினி!

News
0
(0)


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினி டபுள் ஆக்‌ஷனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகை உள்ளது. போலீஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரமும், சமூக ஆர்வலராக ஒரு கதாபாத்திரத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி இதில் டபுள் ஆக்‌ஷினில் நடிக்கும் பட்சத்தில் அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷிடம் பேசப்பட்ட நிலையில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் படம் உருவாக உள்ளது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.