ராஜுமுருகன் – ஜீவா நம்பிக்கைக் கூட்டணி!

News
0
(0)

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன். இவர் “ஜோக்கர்” படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான கதையை நிதானமாக எழுதி வந்தார். அதுமட்டுமல்லாமல், ராஜூமுருகன் பாலாவின் “வர்மா” படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

தற்போது ஜீவாவிடம், தனது கதையைக் கூறி சம்மதமும் வாங்கியிருக்கிறார். ராஜுமுருகனின் முந்தைய படங்களைப் போலவே இந்தக் கதையும் எதார்த்தமாக இருந்ததால் ஜீவாவும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், மாறுபட்ட இந்தத் திரைப்படத்திற்கு “ஜிப்சி” எனவும் பெயரிட்டுள்ளார்கள்.

இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.

இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் எளிய மனிதர்களின் வாழ்வியலையும், அரசியலையும் பேசியவர், தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான படத்தை எடுக்கவுள்ளார். இருப்பினும் இந்தப் படத்திலும் தனது கருத்தியலை ராஜுமுருகன் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்ப்டத்தின் படப்பிடிப்பை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.