மெளனம் காக்கும் ரகுல் ப்ரீத்?

News
0
(0)

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது.

கார்த்தியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க இருக்கிறார்.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை ரகுல் ப்ரீத் சிங்கிடம் சொல்லிவிட்டதாகவும், படத்தில் நடிக்க விரைவில் சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.