தை மாதம் ஜெ.,யின் உண்மை ஆட்சி : தினகரன்

General News
0
(0)

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சாமி கும்பிட வந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. தற்போது காட்டாட்சி நடக்கிறது. கந்துவட்டிக்கு எதிராக ஜெயலலிதா வலுவான சட்டம் கொண்டு வந்தார். தற்போது இருப்பவர்கள் பதவி சுகத்திற்காக ஆட்சியில் உள்ளனர்.

விரைவில் அவர்கள் வீட்டுக்கு செல்லும் காலம் வரும். வரும் தை மாதத்திற்குள் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி ஏற்படும். தை மாதத்தில் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.” என்று கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.