ரெஜினாவின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?

News
0
(0)

‘கண்ட நாள் முதல்’ என்ற தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனார் ரெஜினா. ஆனால் இங்கே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜினாவை தெலுங்கு சினிமா கைகொடுத்து தூக்கியது. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் ரெஜினாவை இப்போது தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்கிறது.

இது பற்றி கேட்டால் ‘சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.

இப்போது நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. முக்கியமாக தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய உருவாகின்றன. எனவே அதுபோன்ற பலமான வேடங்கள் வரும் என்று காத்திருக்கிறேன்’ என்றார். ரெஜினா அடுத்து இந்திக்கு செல்கிறார். இந்தியில் சோனம் கபூருடன் இவர் குகூ என்ற படத்தில் நடிக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.