ஆர்.கே.நகரில் தேனாண்டாள் ஃப்லிம்ஸ்!

News
0
(0)

வைபவ், சனா அல்தாப், சம்பத் நடிப்பில் உருவாகி வரும் ‘R.K.நகர்’ படத்தின் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

சமீபத்தில் சென்னையில் பரபரப்பான தொகுதியாக ‘R.K.நகர்’ பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான நிகழ்வை மக்களை ஈர்க்கும் என்பதே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜனின் இரண்டாது படம் இது.

இப்படத்தை வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

பிரேம்ஜி அமரன் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் K.L.படத்தொகுப்பில் உருவாகி வரும் ‘R.K.நகர்’ படத்தின் தமிழக திரையரங்க உரிமையை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தை விரைவில் தமிழகமெங்கும் பிரமாண்டமாய் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.