படத்தில் நடிக்க நிபந்தனைகள் விதிக்கும் தீக்‌ஷிதா

News
0
(0)

தோழியாக நடித்து நாயகி ஆனவர் த்ரிஷா. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒருவர் நாயகியாகி இருக்கிறார். அவர் பெயர் தீக்‌ஷிதா மாணிக்கம். ‘திருமணம் என்னும் நிக்கா’, ‘ஆகம்’, படங்களில் நடித்த தீக்‌ஷிதா, ‘நகர்வலம்’ படத்தின் நாயகி ஆனார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மாடலிங் செய்தார். 2012-ல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதி போட்டி வரை வந்தார். நாயகியாகிவிட்ட தீக்‌ஷிதாவின் விருப்பம் பற்றி கேட்டபோது…

“சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்திருக்கிறேன். பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், கடுமையான போராட்டத்துக்குப் பிறகே சினிமாவில் நடிக்க அனுமதி கொடுத்தார்கள்.

நான் குடும்பத்தோடு பார்க்கும் விதமான படங்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல வேடம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நடிப்பில் மட்டுமல்ல, காஸ்டியூம், டிசைனிங், இயக்கம் ஆகியவற்றின் மீதும் எனக்கு ஆர்வம் இருக்கிறது” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.