சகாப்த நாயகனின் அடுத்த பட சிங்கிள்

News
0
(0)

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் சகாப்தம் படத்திற்கு அடுத்ததாக உருவாகியிருக்கும் படம், மதுர வீரன்.

வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை மீனாட்சி அறிமுகமாகிறார். இவர்களுடன் சமுத்திரகனி, பி எல் தேனப்பன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பி ஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், படத்தில் இருந்து ஒரு சிங்கிள் ஒன்று நாளை மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. `என்னடா நடக்குது நாட்டுல’ எனத் தொடங்கும் அந்த பாடலை இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி வெளியிடுகிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.