சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது!

Actresses cinema news
0
(0)

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது

மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார்.

அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை பரவலான பாராட்டைப் பெற்று, தமிழ், மலையாளம் மற்றும் ஓடிடி தளங்களில் அற்புதமான புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார்.

சாக்ஷியின் மலையாள அறிமுக திரைப்படமான “பெஸ்டி” விமர்சகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவரை நிலைநிறுத்தியுள்ளது. இதற்கிடையில், அவரது தமிழ் திரைப்படமான “ஃபயர்” பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், திரையரங்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியான சாக்ஷி, பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் திரைத்துறையில் தனக்கான இடத்தை நிரூபிக்க உள்ளார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசிய அவர்,”‘பெஸ்டி’ மற்றும் ‘ஃபயர்’ படங்களுக்கு பார்வையாளர்களின் அன்பும் ஆதரவும் மிகப்பெரிய அளவில் உள்ளது, அடுத்து உருவாகும் திரைப்படங்கள் குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன், ஏனெனில் அவை நான் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை ஏற்று நடிக்க வழிவகுக்கும்”.

பிரகாசமான எதிர்காலம் வரிசையாக வெளியாகவிருக்கும் சாக்ஷி அகர்வாலின் சுவாரஸ்யமான திரைப்படங்களின் மூலம் உறுதியாவதுடன், ரசிகர்கள் அவரை சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான வேடங்களில் வரவிருக்கும் மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.