புதிய நிறுவனம் தொடங்கிய சமந்தா

Speical
0
(0)

முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

தமிழ், தெலுக்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். உடை விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம். அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி இருக்கிறேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு உதாரணமாக இந்த தொழில் இருக்கும். நடிகையாக எனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.