தோள் தரும் தோழன் சமுத்திரகனி!

News
0
(0)

இயக்குநர் சசிகுமார் மகத்தான வெற்றி பெற்றார். நடிகர் சசிகுமார் ஓரளவிற்கு நல்ல பெயர் சம்பாதித்தார். தயாரிப்பாளர் சசிகுமார் மொத்தமாகவே முடிந்து போயிருக்கிறார். இனி ஒரு தயாரிப்பாளராக
அவர் மீண்டு வருவது, தமிழ் சினிமா வரைமுறைகளின் படி சாதாரணமான் காரியமில்லை.

“தாரை தப்பட்டை” படத்தில் விழுந்த அடியிலிருந்து சசிகுமாரால் இன்னும் கூட மீள முடியவில்லை. கடைசியாக வந்த “கொடிவீரன்” கூட சசிகுமாருக்கு கைகொடுக்கவில்லை.

அடுத்தடுத்த தோல்விகளினால் காயம்பட்டிருக்கும் சசிகுமாருக்கு, தோள்கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சமுத்திரக்கனி.

தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் சசிகுமாரை நாயகனாக வைத்து எடுக்க சமுத்திரகனி முடிவு செய்திருபதாக கூறப்படுகிறது. அந்தப் படம் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம்
எனவும் பேச்சு எழுந்துள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.