சந்தானம் காட்டில் அடைமழை!

News
0
(0)

சந்தானம் காட்டில் செம்ம மழை இப்போது. காமெடியை கைவிட்டு விட்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இப்போது ஜெட் வேகத்தில் பிக்-அப் ஆகியிருக்கிறார். அடுத்தடுத்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ என வரிசைகட்டி நிற்கின்றன சந்தானத்தின் படங்கள். இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரபரவென்று பிஸியாக நடித்துவரும் சந்தானம், அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷின் படங்களில் ஹீரோவை விட காமெடியனுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும், இந்த படத்தில் காமெடியனே ஹீரோவாக நடிக்கிறார் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

அடுத்தடுத்து தனது படங்கள் ரசிகர்களைக் கவராத சூழலில், இந்தப் படத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அதிகமாகவே இருப்பதால், புதிய வடிவில் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருக்கிறாராம் ராஜேஷ்.

இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக நடிகர்கள் ஒப்பந்தம் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.