மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார்!

News
0
(0)

“சென்னையில் ஒருநாள் 2” படத்திற்குப் பிறகு நடிகர் சரத்குமார், “அடங்காதே”, “ரெண்டாவது ஆட்டம்”, “நல்லாசிரியர்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவை மட்டுமல்லாமல் ஒரு புதிய படத்திலும் இப்போது நடிக்கவிருக்கிறார்.

“பாம்பன்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டத் தோற்றத்தில் நடிக்கிறார் சரத்குமார். மேலும் இதுநாள் வரை அவருக்கு
வழங்கப்பட்டு வந்த “சுப்ரீம் ஸ்டார்” என்ற பட்டத்தை “புரட்சித் திலகம்” என்று மாற்றியிருக்கிரார்கள் படக்குழுவினர்.

இந்தப் படத்தை கமெர்சியல் சினிமா எடுப்பதில் வல்லவரான இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இதற்கு முன் சரத்குமார் – ஏ.வெங்கடேஷ் கூட்டணியில் “ஏய்”, “சாணக்யா”, “மகாபிரபு”, “சண்டமாருதம்” என நான்கு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. “பாம்பன்” இவர்கள் இணையும் ஐந்தாவது படமாகும். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.