இப்படியும் படம் எடுக்கலாமா? சிம்புவின் புதிய முயற்சி

News
0
(0)

சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் முதற்கட்ட தகவலை சமீபத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்…’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டாம் முறை எழு. விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. செப்டம்பர் 2017 வெளியீடு. யுவன் சங்கர் ராஜா இசை’ இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இப்படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை சிம்பு செய்ய இருக்கிறார். அதாவது. யுவன் இசையில் இப்படத்தின் பின்னணி இசை உருவாகி வருகிறது. முதல் முறையாக பின்னணி இசையை முடித்த பிறகு, இதன் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு படம் முடிந்த பிறகுதான், படத்திற்கான பின்னணி இசையை உருவாக்குவார்கள். ஆனால், இந்த படத்தில், முதலில் பின்னணி இசையை உருவாக்கிய பிறகு படப்பிடிப்பை தொடங்கு கிறார்கள். சிம்புவின் இந்த புதிய முயற்சி, படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.