ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பிரபல சிங்கப்பூர் நடிகர்

News
0
(0)

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். விண்வெளியை மையப்படுத்தி உருவாகிவரும் முதல் இந்திய படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு பிரம்மாண்ட பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரோன் அஜீஸ் ‘கே.எல்.கேங்ஸ்டர்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர். பல இந்தியப் படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புக்கொள்ளாத அஜீஸ் ‘டிக் டிக் டிக்’ படத்தின் திரைக்கதையை படித்ததும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆரோன் அஜீஸின் வருகை இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இப்படத்தை நேமிசந்த் ஐபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹித்தேன் ஜபக் தயாரித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *