தொண்டைக்கட்டுடன் துள்ளல் பாடல்

News
0
(0)

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த பாடலைப் பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன்.

பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு கூத்தன் என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கூத்தன் திரைப்படம் நடனக் கலைஞர்கள் வாழ்க்கை மற்றும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கப்படுகின்ற திரைப்படமாகும்.

ஹீரோவாக களம் இறங்குகிறார் ராஜ்குமார். இவருக்கு வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார். ஹீரோயினாக ஸ்ரீஜீதா, கிரா மற்றும் சோனா என புதுமுக நாயகிகள் நடிக்கிறார்கள். இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் எ எல் வெங்கி.
சூரன் மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் பாலாஜி அவர்கள் இசையமைக்க, துள்ள வைக்கும் கவிஞர் விவேகாவின் வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி” என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார்.

ரம்யா நம்பீசன் அதுபற்றி கேட்ட போது, “இசையமைப்பாளர் பாலாஜியின் இசையில் நான் முதல்முறையாகப் பாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் பல மொழிகளில் நான் பாடியிருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தை உச்சரிப்பை ஆரம்பத்தில் அறிந்திட சற்றே சிரமப்பட்டாலும் பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் நன்கு பாட முடிந்தது. சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இப்பாடலைப் பாடிப் பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று சிறப்புடன் பாடி முடித்தேன் என்று கூறினார்.

இசையமைப்பாளர் பாலாஜி கூறிய போது, “நடிகை ரம்யா நம்பீசன் ஒரு வித மாயாஜால குரலைக் கொண்டிருக்கிறார். இது மந்திரம் செய்வதாக உணர்ந்தேன். அது உண்மையில் மந்திரம் செய்தது. நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு மற்றும் நீல்கிரிஸ் முருகனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.