மீண்டும் பிரம்மாண்டம் காட்டப்போகும் சிவகார்த்திகேயன்!

News
0
(0)

காமெடி, கலாட்டா என வலம் வந்த சிவகார்த்திகேயன், “வேலைக்காரன்” மூலமாக செம்ம சீரியசான பெர்ஃபார்மராக தன்னை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுவிட்டார்.

அதிலிருந்து தன்னை கொஞ்சம் மாற்றிக்கொண்டு பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, மீண்டும் “வேலைக்காரன்” பாணியிலேயே பிரம்மாண்ட கூட்டணியோடு இணைகிறார்.

“இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கத்தில் “விஞ்ஞானியாக” சிவகார்த்திகேயன் நடிக்கிறார். “24ஏ.எம்.ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் “வேலைக்காரன்” படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் முத்துராஜ் இந்த படத்திற்கும் கலை பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான், நீரவ் ஷா, முத்துராஜ் மட்டுமல்லாமல் ரகுல் பிரீத் சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே உச்சத்திற்கு சென்றுவிட்ட சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இந்தப் படத்திற்குப் பிறகு இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.