சோனுசூட்டின் அடுத்த அதிரடி

Special Articles
0
(0)

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில், ஹரியானாவில் உள்ள மோர்னி என்கிற கிராமத்தில், மொபைல் சிக்னல் கிடைக்காமல், மரத்தின் மீது உட்கார்ந்து அந்தக் கிராமத்துச் சிறுமி ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த சோனு சூட், மாணவர்கள் சிரமமின்றி ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க, அந்த கிராமத்தில் மொபைல் டவர் ஒன்றை அமைத்துக்கொடுத்து உதவி உள்ளார்.

அண்மையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.