பட்டுச்சேலைகளுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி பட்டு என்ற புதிய ஷோரூம்
திறக்கப்பட்டுள்ளது. எழிலுற அமைந்துள்ள இந்த ஷோரூமை வெள்ளியன்று (மே 4) காலை
திரைப்பட நடிகை செல்வி ஸ்ரீதிவ்யா திறந்துவைத்தார்.
பட்டுச்சேலைகள் விற்பனையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம்
கொண்ட நிறுவனம் ஸ்ரீகாஞ்சிப்பட்டு ஆகும். இதை திரு.சுரேஷ் நிறுவினார். மொத்த
விற்பனையாளராக தனது பணியை தொடங்கிய அவர் தற்போது சில்லறை விற்பனையிலும்
இறங்கியுள்ளார். காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே அன்னை
இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூம் சுமார் 10ஆயிரம் சதுர அடி
பரப்பளவு கொண்டது.
இந்த புதிய ஷோரூமை வெள்ளியன்று காலை திரைப்பட நடிகை செல்வி ஸ்ரீதிவ்யா
திறந்துவைத்தார். இந்த ஷோரூம் அழகுற கலை அம்சங்களுடன் வடிமைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஷோரூமுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு இனிமையான சூழலை
அனுபவவிக்கமுடியும். ரூ.500 முதல் ரூ.1லட்சம் வரை அனைத்து வகையிலான பட்டுச்
சேலைகளும் ஒரே இடத்தில் இங்கு கிடைக்கும்.
How useful was this post?
Click on a star to rate it!
Average rating 0 / 5. Vote count: 0
No votes so far! Be the first to rate this post.