எல்லாம் ஒரு காரணத்துக்காகத் தான் : சன்னி லியோன்

News
0
(0)

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். தற்போது, மும்பையில் தங்கியிருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து வாழும் சன்னி லியோன் முதலில் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கை பற்றி, “என் பெற்றோரும், சகோதரரும் என் பாதுகாப்புக்காக அனைத்தும் செய்து இருந்தனர். என்றாலும், நான் 21 வயதிலேயே வெறுப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. என் பெற்றோர் விரும்பாத எதிர் திசையில் நான் சென்றேன். என்றாலும், என் வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. நான் எது பற்றியும் குறை சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் ஏதாவது ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும்.

21 வயதிலேயே மக்களிடம் இருந்து என் மீது வந்த வெறுப்பை கண்டு மனதளவில் நொறுங்கி விட்டேன். ஆனால், என் குழந்தைகள் யாரையும் ஏமாற்றக் கூடாது. திருடக்கூடாது. நல்லவர்கள் என்று பெயர் வாங்க வேண்டும் என விரும்புகிறேன். நான் எதிர்கொண்ட வெறுப்பை அவர்கள் சந்திக்கக்கூடாது.” என்று கூறியிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.