சூர்யாவுடன் மூன்றாம் முறையாய் இணையும் இயக்குநர்!

News
0
(0)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இறுதிகட்டப் பணிகள் எல்லாம் முடிவுற்று, பொங்கல் ரிலீசுக்கு படம் ரெடியாக இருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தில் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கப் போகிறாராம். ஏற்கனவே அயன், மாற்றான் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
கே.வி.ஆனந்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போனதால், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என பேசப்படுகிறது.

கடைசியாக கே.வி.ஆனந்த் விஜய் சேதுபதியை வைத்து கவண் படத்தை இயக்கியிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.