தானா சேர்ந்த கூட்டணி!

News
0
(0)

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

2018 தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வரும் திட்டத்தோடு செல்வராகவனும், சூர்யாவும் முதல் முறையாக இணையும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இவர் இப்போது கார்த்தி நடித்துள்ள “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தயாரித்திருக்கிறார்.

ஏற்கனவே விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா கூட்டணியும் 2018 தீபாவளியை குறிவைத்துள்ள நிலையில் சூர்யா-செல்வராகவன் கூட்டணியும் அதே திட்டத்துடன் களமிறங்குவது சூர்யா ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.