சுட்டுப் பிடிக்க உத்தரவு !

News
0
(0)

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிய செய்தி ஒன்றும் இல்லை. பல இயக்குநர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகர்களாக மாறி விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இயக்குநர் சுசீந்திரனும் இணைந்து விட்டார்.

திரைத்துறைக்கு வந்து 8 அண்டுகள் ஆகிறது சுசீந்திரனுக்கு. பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அவற்றில் ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். இத்தனை நாள் திரைக்கு பின்னால் நின்றவர், இப்போது திரையில் முதல் முறையாக முகம் காட்டுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக விளங்கும் மிஷ்கினோடு இணைந்து சுசீந்திரன் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்தும் நடிக்கிறார். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று புதிர் வைத்தார் விக்ராந்த். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன்படி ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.