தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஜீனியஸ்!

News
0
(0)

தமிழ் சினிமாவில் தொய்வே இல்லாமல் படங்களை இயக்கும் ஒரே இயக்குநர் சுசீந்திரன் தான். எப்போதுமே ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவது அவரது வழக்கம்.

தற்போது “ஏஞ்சலினா” படத்தினுடைய வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், “ஜீனியஸ்” என்று அடுத்த படத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

இன்றைய சமூக சூழ்நிலையில் குழந்தைகள் மீது கல்வி திணிக்கப்படுவதால், அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்ததைப் பற்றி பேசும்படியாக கதை அமைத்திருக்கிறாராம் சுசீந்திரன்.
இந்தப் படம் நிச்சயமாக தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் பிடிக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.