ஸ்டைலிஷான, மாஸான தோற்றத்தில் கார்த்தி

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “தேவ்”. இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2”, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “மோகினி” ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன், […]

Continue Reading

எழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

  சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.    தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.   விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.    விழாவில் தேவயானி […]

Continue Reading

நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம், நேர்மையான அதிகாரியாக இருப்பது அதைவிட கஷ்டம் – கார்த்தி

நேற்று , ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.   இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி …. ,   தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. […]

Continue Reading

நாச்சியாரும், பண்பாட்டுக் காவலர்களும் !

நிச்சயமாக ஜோதிகாவுக்கோ, பாலாவுக்கோ முட்டுக் கொடுக்கப் போவதில்லை இந்தக் கட்டுரை. எழுதக் கூடாதென்று நினைத்து நாச்சியார் விவகாரத்தைத் தவிர்த்தே வந்தேன். லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகளுக்கு அமைதியாக வேடிக்கைப் பார்த்தது போலவே, நாச்சியார் சலசலப்புகளையும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கடந்து விடலாம் என்பதில் மண்ணள்ளிப் போட்டது ஒரு வீடியோ. அந்த வீடியோவில், “வேறு யாரோ தெருவில் போறவங்களோ, யாராவது துணை நடிகைகளோ, ஆண் நடிகர்களோ அந்த சர்ச்சைக்கு வித்திட்ட வார்த்தையை (இனி அந்த வார்த்தையை […]

Continue Reading

“குற்றப்பரம்பரை”களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? “தீரன் அதிகாரம் ஒன்று” படம் எழுப்பும் கேள்விகள்.

ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், “தீரன் அதிகாரம் ஒன்று”. ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்… இந்த வாக்கியம் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்… என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் […]

Continue Reading

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்!

இந்தத் தலைமுறையினரில் பலருக்குக் “குற்றப் பரம்பரை சட்டம்” குறித்தோ அதன் வரலாற்றுப் பின்னணி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக “குற்றப் பரம்பரை” குறித்து ஒரு சிறிய அறிமுகம், குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் […]

Continue Reading

தீரன் குறித்து டிஜிபி ஜாங்கிட் விமர்சனம்

சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரீமியர் காட்சியைப் பார்த்த பிறகு பேசிய சூர்யா, “தீரன் அதிகாரம் ஒன்று, ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, காவல்துறை அதிகாரிகள் […]

Continue Reading