கடவுளே வாழ்த்தியதுபோல இருக்கிறது : ராஜமௌலி பெருமிதம்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பாகுபலி-2’ படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். ‘பாகுபலி-2’ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார். […]

Continue Reading

பாகுபலி 2 படக்குழுவினருக்கு பிரபல நடிகர் பாராட்டு

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள ‘பாகுபலி–2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு, திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி-2′ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், “’பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தெரிந்த படம், தெரியாத தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத […]

Continue Reading

பாகுபலி 2 – விமர்சனம்

பாகுபலி 2 ரிலீஸ்க்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் பாகுபலி முதல் பாகம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தொடங்கி விட்டது. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற ட்ரண்டிங் கேள்விக்கு விடையை பாகுபலி-2ல் விஷூவல் ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் ராஜமெளலி. பல கோடி ரூபாய் பட்ஜெட், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9000 திரையரங்குகளில் திரையிடல் என்று பாகுபலி-2 யின் பிரமாண்டம் இந்தியாவுக்கு ரொம்பவே புதிது. அந்த பிரமாண்டத்தின் தொனி, திரையில் படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே தென்பட்டு […]

Continue Reading

கேரளாவில் 290 தியேட்டர்களில் வெளியாகி ‘பாகுபலி-2’ சாதனை

கேரளாவில் குறைந்த செலவிலேயே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மலையாளப் பட உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி போன்றோரின் படங்கள் கூட சில கோடி செலவிலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் மலையாளப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் 100-க்கும் குறைவாகவே இருக்கும். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலிமுருகன்’ படம் தான் மலையாள பட உலகில் அதிக பொருட்செலவில் வெளியான சினிமா என்ற சாதனையை படைத்து இருந்தது. இந்த படமும் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் […]

Continue Reading

பிரமாண்ட படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து?

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் `பாகுபலி 2′ உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. `பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு […]

Continue Reading

இணையத்தில் கசிந்த 2 நிமிட காட்சிகள் – படக்குழு அதிர்ச்சி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது. […]

Continue Reading

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜ் : வீடியோ இணைப்பு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார். அன்றே நடிகர் சத்யராஜின் உருவபொம்மையை கர்நாடக […]

Continue Reading