சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ’கென்னடி கிளப்’!

இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் […]

Continue Reading

உடைந்த திரையுலகம்.. உடைத்த கந்துவட்டியும், ஆர்.கே.நகரும்!

திரையுலகில் பொதுவாகவே போட்டி என்பது நேரடியாகவும், பொறாமை என்பது மறைமுகமாகவும் இருக்கக் கூடியது தான். பெரும்பான்மையான நேரங்களில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் இருந்தாலும், திரையுலகின் நலனைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஓரணியிலேயே நின்றிருக்கிறார்கள். உள்ளுக்குள்ளேயே அரசியல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரிய நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை எதையும் வெளிப்படையாக பேசாமலே கடந்து போவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. சரத்குமாரை வீழ்த்தி நடிகர் சங்கத்தை என்று விஷால் கைப்பற்றினாரோ […]

Continue Reading

விமர்சனங்களுக்கு மதிப்பளித்த இயக்குனர்!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம். இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து […]

Continue Reading

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்!

வலுவான கதைதளத்துடனும், ஆழமான உறவுப் பின்னல்களையும் கொண்டு படம் செய்யக் கூடிய இயக்குனர் சுசீந்திரனின் மேல் நமக்கிருக்கும் அதீத எதிர்பார்ப்பை இந்த “நெஞ்சில் துளிவிருந்தால்” அசைத்துப் பார்க்கிறது. வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி மாவீரன் கிட்டு வரையிலாயிலான (ராஜபாட்டை நீங்கலாக) அவரது படங்கள் போலவே இதிலும் ஒரு களம் இருக்கிறது. நட்பு, குடும்பப் பாசம், மருத்துவப் படிப்பு மோசடி என வலுவான ஒரு களம் இருந்தும் இம்மூன்றில் எதை அழுத்தமாகக் கையாளலாம் என்பதில் இயக்குனருக்குக் குழப்பம் இருந்ததாகவேத் […]

Continue Reading

நெஞ்சில் துணிவிருந்தால்.. உள்ளடக்கம் சொன்ன வைரமுத்து!

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி மற்றும் ஹரிசுத்தமன் ஆகியோர் நடிப்பில்  தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தில் இமான் இசையில் வைரமுத்து ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’  குறித்து வைரமுத்து கூறுகையில், “நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் […]

Continue Reading

எதிர்பார்த்தது கிடைத்த மகிழ்ச்சியில் விக்ராந்த்

சுசீந்திரன் இயக்கத்தில், சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நெஞ்சில் துணிவிருந்தால்’. அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தது குறித்து பேசிய விக்ராந்த், “பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் சார் இயக்கத்தில் எனக்கு மீண்டும் நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி, ஹரிஷ் உத்தமன் என மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் […]

Continue Reading