வசூல் மன்னனான வில்லன்

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’. அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. […]

Continue Reading

சினிமா தற்போது விவசாயமாகி விட்டது : சேரன்

கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Continue Reading

திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ

வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், “வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தைப் பார்க்க […]

Continue Reading