தேவைப்பட்டால் புதிய கட்சி : பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கெளரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 […]

Continue Reading

ஜனாதிபதி இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார்

இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம […]

Continue Reading

முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய குஜராத் தேர்தல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் முன்னோடியாக தினத்தந்தி : பிரதமர் மோடி

இன்று தினத்தந்தி நாளிதழின் பவள விழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ‘அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தி 75-வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தமிழில் பேசி மோடி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிய முறையில் செய்திகளை […]

Continue Reading

பவளவிழா காணும் தினத்தந்தி!

1942 ஆம் ஆண்டு மதுரையில் சி.பா.ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்ட “தந்தி” தொடங்கப்பட்ட நாளிதழ் பின்னாளில் “தினத்தந்தி” என்று மாறியது. தமிழ் செய்தித்தாள் வரலாற்றில் மாபெரும் புரட்சியை தினத்த்ந்தி செய்துள்ளது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று. வெறும் வானொலியை நம்பியிருந்த காலகட்டத்தில் செய்திகளை கடகோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பதில் முதல்வனாக விளங்கிய தினத்தந்தி, வரலாற்றில் பல மைல்கற்களைக் கடந்து இன்று செய்தி ஊடகங்களின் மன்னனாகத் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில்  நடைபெற்ற இந்த பவள விழாவில் இந்தியப் […]

Continue Reading

பிரதமர் மோடியின் லட்சியம்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு மீரட்டில் கோவில்

பிரதமர் மோடியின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்பவர் கட்டுகிறார். இவர், உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தில் என்ஜினியராக பணியாற்றி கடந்த 29-ந்தேதிதான் ஓய்வு பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவரை மிகவும் கவர்ந்தது. மேலும் மோடி கொண்டு […]

Continue Reading

பிரதமர் மோடியைச் சாடிய பிரகாஷ்ராஜ்

கடந்த மாதம் 5-ந்தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். கெளரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த […]

Continue Reading

மோடி திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினி ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ‘போருக்குத் தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரத் தயாராகிறார் என்று கூறப்பட்டது. தமிழருவி மணியன் இதற்கு முன் ஏற்பாடாக பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் ஏராளமான ரஜினி […]

Continue Reading

2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

8-8-1942 அன்று பம்பாய் நகரில் (தற்போதைய மும்பையில்) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று மாலை பம்பாயில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அமைதியான அறவழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். புனேவில் உள்ள ஆகா கான் […]

Continue Reading