உடைந்தழுத உமாதேவி!

கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப் பூர்வமானதாக்கியிருப்பார். “அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க […]

Continue Reading

அறம் காட்டிய அம்மா !  அழகும், திறமையும் கொண்ட சுனுலஷ்மி!

  அறம் படத்தின் கதாநாயகிகள் 3 பேர். முதல் கதாநாயகி: ஆளுமை நிறைந்த பேரழகும் பெருந்திறமையும் கொண்ட கலைஞர் #நயன்தாரா. இரண்டாவது கதாநாயகி: படம் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை உருகிப்பதற வைக்கும், #அம்மா சுனுலஷ்மி. மூன்றாவது கதாநாயகி: அறம் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் குழந்தை #தன்ஷிகா (எ) #மகாலட்சுமி. இதில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சுனுலஷ்மி அழகும் திறமையும் கொண்ட நடிகை, அற்புதமான பெல்லி நடனக்கலைஞர். அறம் படத்தில் […]

Continue Reading

அறம் – விமர்சனம்!

எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் துன்பியலை உதாசீனப்படுத்தியும் ஊனப்படுத்தியுமே பழக்கப்பட்ட சினிமாவில், அச்சீழ்பிடித்த பழக்கத்தை இடக்கையால் புறந்தள்ளி விட்டு எப்போதாவது ஒருசில சினிமா மட்டுமே கேட்பாரற்ற எளிய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கான ‘அறம்’ பேசும். அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் மக்களுக்கெதிராக எப்படி வளர்ந்து நிற்கிறதென்பதை மேம்போக்காக சொல்லிக் கடந்து போகாமல், தனித்தனி செங்கலாகப் பிரித்து தைரியமாகக் கைநீட்டிச் சாட இதுபோல் இன்னும் நூறு ‘அறம்’ தேவைப்படுகிறது நமக்கு. ஒரு நாட்டின் அரசாங்கம், தனது ஒட்டுமொத்த […]

Continue Reading

காடுகளுடன் காதலைச் சொல்லும் ”மரகத காடு”!!

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் […]

Continue Reading